மதுரை மாவட்டத்தில் கிரானைட் கனிம முறைகேடு குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் மற்றும் அவரது குழுவினரால் புலத் தணிக்கை செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அதிகாரி சட்ட ஆணையர் சகாயம் பதவி காலம் வருகிற 15–ந் தேதியுடன் முடிவு
பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் மனுதாரர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், இந்த ஆணையத்திற்கு புதிதாக கோரிக்கை மனுக்கள் ஏதும் பொதுமக்கள் அனுப்ப வேண்டாம் என்று சட்ட ஆணையர் சகாயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


