‘புலி’யை காண ரகளை செய்த விஜய் ரசிகர்கள் : தடியடி அடி கொடுத்து கட்டுப்படுத்திய காவல் துறையினர்

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி புலி’  திரையிடப்படு வெளியாகுமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பல நாட்களாக அச்சம் நிலவியது.நடிகர் விஜய் நடித்துள்ள ‘புலி’ படம் இன்று (அக்.1) தமிழகம் முழுவதும் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, விஜய் வீட்டில் வருவான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் ‘புலி’ படம் திட்டமிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படுவதிலும் சிக்கல் நீடித்தது.

 திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான க்யூப் (QUBE) உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முறையாகச் செய்வதி மேலும் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இப்படம் நேற்றிரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.இந்தநிலையில், சென்னையில் உள்ள ஜெமினி லேப்-பில் ‘புலி’ படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். க்யூபுக்கு செலுத்த வேண்டிய பணம் அதிகமாக இருப்பதால், 10 மணிக்கு வங்கிகள் திறந்ததும் தான் தொகையை செலுத்த முடியும் என்பதால், அதற்குப் பிறகே படம் வெளியாக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்தது.

 இதனிடையே, திடீரென 10 மணி காட்சியும் ரத்து செய்யப்படுவதாகவும், டிக்கெட் பணம் திரும்ப தரப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அந்த பகுதியே களேபரம் ஆனது.இதனிடையே, படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கியதாகவும், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் ‘புலி’ தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது.

 இன்று அதிகாலைத் தொடங்கி சிறப்புக் காட்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதே தவிர, வழக்கமான காலைக் காட்சிகள் தொடங்கி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர். அதன்படி, காலை 10 மணிக்கு அனைத்து திரையரங்குகளிலும் ‘புலி’ படம் திரையிடப்பட்டது.இந்நிலையில், மதுரையில் உள்ள சினிப்பிரியா திரையரங்கில் ரசிகர்களுக்கு காலை 5 மணிக்கு பிரத்யேக காட்சி போட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திரையரங்கு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். இதனிடையே, சினிமா காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 10 மணிக்கு சினிமா திரையிடப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

மதுரையில் படக்காட்சி ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த நடிகர் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories