திருமணத்துக்கு வராத உறவினருக்கு உணவு பில் அனுப்பிய மணமகள்

Published:

தனது திருமணத்துக்கு உறவினர்கள் வராமல் போனதால், அவர்களுக்கான உணவு வீணாய்ப்போனது என்பதைப் புரிய வைக்க எண்ணிய ஒரு மணமகள், அவர்கள் உண்ணாமல் போன உணவுக்கு பில்லை அனுப்பியுள்ள விவகாரம் பேஸ்புக்கில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில், சிறு குழந்தையுள்ள ஒரு பெற்றோர் உறவினரின் திருமண நாளின்போது தமது குழந்தையை பார்த்துக்கொள்ள வேலையாள் வராதுபோனதால், குறிப்பிட்ட திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

பொதுவாக திருமணம் செய்ய முடிவெடுக்கும் தம்பதி, யார்? யார்? தனது திருமணத்துக்கு வரவேண்டும் என முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றாற்போல ஆளுக்கு ஏற்ப உணவுவகைகளை ஆர்டர் செய்வர். அவர்களது இருக்கை எங்கேயிருக்க வேண்டும் என்பது வரை திருமணத்துக்கு நாள் பார்க்கும்போதே முடிவு செய்துகொள்வர்.

இருநூறு அல்லது முந்நூறு பேர் மட்டுமே பங்கேற்கும் இதுபோன்ற திருமணங்களின் செலவு குறைந்தது இருபது லட்சங்களைத் தாண்டும். இதுபோன்ற ஒரு திருமணத்தில், வராமல்போன உறவினர்கள் மீதான தனது வெறுப்பை காண்பிக்க எண்ணிய அந்த மணமகள் வரியுடன் சேர்த்து 75 அமெரிக்க டாலருக்கான பில்லை தனது உறவினருக்கு அனுப்பியுள்ளார்.

இந்தப் பில்லுக்கு பணம் செலுத்தினால் பிரச்சனை முடியுமா? அல்லது இதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்? என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பெண்மணிக்கு, ஆயிரக்கணக்கானோர் ஆலோசனை கூறி வருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

 

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img