வங்கியில் சிக்கிய கள்ளநோட்டுகள்: காவல் துறை அ.தி.மு.க. கவுன்சிலரிடம் விசாரணை நடத்த திட்டம்

Published:

 

திருச்சி மாவட்டம் பாலக்கரை துரை சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி பாரதியார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார்.

அப்போது அவர் வங்கியில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரின் கணக்கில் ரூ.2 லட்சத்தை செலுத்தினார். கோபிநாத் கொடுத்த பணத்தை வாங்கிய, வங்கி ஊழியர் சந்தேகத்தின் பேரில் கள்ள நோட்டுக்களை கண்டு பிடிக்கும் கருவியில் அதனை வைத்து சோதனை செய்தார். அப்போது கோபிநாத் கொடுத்த ரூ.2 லட்சத்தில் 132 கள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் உடனடியாக அந்த வங்கிக்கு சென்று கோபிநாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. கவுன்சிலரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கள்ள நோட்டுகள் கோபிநாத்துக்கு கிடைத்தது எப்படி, அதனை புழக்கத்தில் விட்டது யார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img