லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் கோரிக்கை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று காலையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அவர், துறைமுக ஊழியர்களோடு சேர்ந்து சில இடங்களை சுத்தம் செய்தார். இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழியை ஏற்று அதனை கடைபிடிக்க வேண்டும். நமக்கு மகாத்மா காந்தி வழிகாட்டியாக உள்ளார். இந்தியா தொழில்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. பிரதமர் தூய்மை இந்தியா திட்டதை தொடங்கி வைத்து உள்ளார். அதனை 125 கோடி மக்களும் கையில் எடுத்து செய்ய வேண்டும்’’ என்று கூறினார் .
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடியை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக இலங்கை பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தப்பட்டு உள்ளது.

தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண மீனவர்கள், அரசுக்கு அவகாசம் தர வேண்டும். அதுவரை மீனவர்கள் கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டும். தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க தயாராக உள்ளோம். இலங்கை அரசு முடிவை தெளிவாக கூறவேண்டும்.

நாடு முழுவதும் சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு நிதி ஆதாரம் அவசியம். இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மக்கள் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும். கட்டணத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. அதனை மாற்றம் செய்ய ஆய்வு செய்து வருகிறோம், அதற்கு அவகாசம் தேவை. எனவே லாரி உரிமையாளர்கள் மக்கள் நலனை கருதி போராட்டத்தை கைவிட வேண்டும்.

கடற்கரை கிராமங்களை இணைத்து 200 சிறிய துறைமுகங்கள், பெரிய துறைமுகங்களை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சில சிறிய துறைமுகங்கள் பெருந்துறைமுகங்களாக மாறுகின்றன. அதில் குளச்சல் துறைமுகமும் ஒன்றாகும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories