நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அரசியலில் குதித்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேரன்

Published:

 முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சேக்சலீம் கடந்த மாதம் 28-ந்தேதி பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து தமிழக பாரதீய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்திற்கு நேற்று மதியம் அவர் வந்தார்.

அவரை மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, செய்தி தொடர்பாளர்கள் பிரசாத், ரவிசந்திரன் ஆகியோர் வரவேற்றனர். பாரதீய ஜனதாவில் இணைந்தது குறித்து அப்துல்கலாம் பேரன் சேக் சலீம் கூறியதாவது:-

வளர்ச்சி பணிகளை முன் நிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி பாடுபட்டு வருகிறார். இந்த நாட்டை வளர்ச்சி பணியில் கொண்டு செல்கிறார். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். அந்தவகையில் அவரால் ஈர்க்கப்பட்ட நான் பாரதீய ஜனதாவில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். நாட்டுக்காக பாடுபடுவேன் என அவர் கூறினார்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நாட்டுக்காக தினம் தினம் உழைக்கும் பிரதமர் நரேந்திரமோடியால் ஈர்க்கப்பட்டு பாரதீய ஜனதாவில் இணைந்து இருக்கும் சேக்சலீமை வரவேற்கிறோம். அவரது உழைப்பு கட்சிக்கு பயன்படும். கட்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று என்னிடம் அவர் உறுதியளித்து இருக்கிறார் என தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img