தமிழ்மாநில காங்கிரஸ் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் குதித்தது – ஜி.கே.வாசன்

Published:

த.மா.கா. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என்றும், தமிழகம் முழுவதும் தான் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக எங்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகிறோம். விரைவில் கவர்னரை சந்தித்து ஒரு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துகளை சமர்ப்பிப்போம். மக்களின் எண்ணங்களுக்கேற்ப தமிழக அரசு முடிவுகளை எடுக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவான நீர்த்து போன தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்ததை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அந்த வகையில் அந்த கட்சிகள் போராடி வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் முதல் நான் மக்களை சந்தித்து வருகிறேன். அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன். அந்தவகையில் நாங்கள் முதலிலேயே பிரசாரத்தை தொடங்கி விட்டோம். 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற டிசம்பர் 1-ந்தேதி தொடங்கி பிப்ரவரியில் நிறைவு செய்வோம்.

பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மக்கள் விரும்பும் கூட்டணியில் இருப்போம். மக்கள் பரபரப்பான அரசியலை விரும்புகிறார்களா? இயல்பான அரசியலை விரும்புகிறார்களா? என்பது அவர்களின் முடிவுக்கு பிறகு தான் தெரியும்.நெல் குவிண்டாலுக்கு ரூ.2,175 வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

 

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img