திருநெல்வேலியின் சாலியர் பகுதியில் டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டடுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மாரியப்பன், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் நெல்லையில் கட்டிட தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் சாலியர் பகுதியில் டூ வீலரில் சென்ற போது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். இதில் மாரியப்பன், சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜ்குமார் படுகாயமடைந்துள்ளார். திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


