பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நீதிபதி

பீகாரின் கைமுர் பகுதியில் இன்று(அக்.,12) நடைபெறுவதாக இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என மாவட்ட நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு முறை பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தும், அதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று(அக்., 12) நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தலுக்கான, பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தை கைமூர் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைமுர் பகுதி வெகு காலமாக ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதியாக விளங்குகிறது. மாவோயிஸ்ட் பாதிப்புக்கு உள்ளான இப்பகுதியில் மோடியின் பிரசாரத்தை நடத்த பா.ஜ., அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி அளிக்க மாவட்ட நீதிபதி துவேஷ் ஷெக்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஷெக்ரா, மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். கைமூர் மாயிஸ்ட் பாதிப்பு நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமரின் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க முடியாது என ஷெக்ரா திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால், 30,000 பேருக்கு மேல் கூட்டம் கூட்ட மாட்டோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து விட்டோம் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கூறி பா.ஜ., மீண்டும் அனுமதி கேட்டது. தொடர்ந்து 2வது முறையாக கேட்டும், அனுமதி தர முடியாது என கூறிவிட்டார்.

பிரதமரின் கூட்டத்திற்கு அனுமதி அளிக்காததற்கு பீகார் அரசின் அழுத்தமே காரணம் என பா.ஜ., மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். போலீசார் அனுமதி அளித்த பிறகும் கூட மாவட்ட நீதிபதி அனுமதி அளிக்க மறுக்கிறார். இதனால் பிரதமரின் கூட்டத்திற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில், பீகார் மூத்த தேர்தல் அதிகாரி அஜய் வி நாயக்கிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Topics

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories