பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நீதிபதி

பீகாரின் கைமுர் பகுதியில் இன்று(அக்.,12) நடைபெறுவதாக இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என மாவட்ட நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு முறை பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தும், அதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று(அக்., 12) நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தலுக்கான, பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தை கைமூர் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைமுர் பகுதி வெகு காலமாக ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதியாக விளங்குகிறது. மாவோயிஸ்ட் பாதிப்புக்கு உள்ளான இப்பகுதியில் மோடியின் பிரசாரத்தை நடத்த பா.ஜ., அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி அளிக்க மாவட்ட நீதிபதி துவேஷ் ஷெக்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஷெக்ரா, மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். கைமூர் மாயிஸ்ட் பாதிப்பு நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமரின் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க முடியாது என ஷெக்ரா திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால், 30,000 பேருக்கு மேல் கூட்டம் கூட்ட மாட்டோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து விட்டோம் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கூறி பா.ஜ., மீண்டும் அனுமதி கேட்டது. தொடர்ந்து 2வது முறையாக கேட்டும், அனுமதி தர முடியாது என கூறிவிட்டார்.

பிரதமரின் கூட்டத்திற்கு அனுமதி அளிக்காததற்கு பீகார் அரசின் அழுத்தமே காரணம் என பா.ஜ., மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். போலீசார் அனுமதி அளித்த பிறகும் கூட மாவட்ட நீதிபதி அனுமதி அளிக்க மறுக்கிறார். இதனால் பிரதமரின் கூட்டத்திற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில், பீகார் மூத்த தேர்தல் அதிகாரி அஜய் வி நாயக்கிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories