தாத்ரி சம்பவத்தில் பிரதமர் மௌனம் ஏன்?: பிருந்தா காரத்

Published:

சென்னை:
தாத்ரி படுகொலைச் சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொறுப்பாளருமான பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.
திங்கள்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது…

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சொல்வதற்கு மாறாக, இங்கு உள்ளவர்கள் மதமாற்றத்தில் தொடங்கி, மாட்டுக்கறி வரை அரசியல் செய்து நாட்டைப் பிளவுபடுத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை மோடி கண்டுகொள்வது இல்லை.
 
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், மத ரீதியாக பகைமை பாராட்டுபவர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் பிகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி கூறினார். ஆனால், தாத்ரி படுகொலைச் சம்பவம் தொடர்பாக அவர எதுவும் கண்டித்துப் பேசவில்லை. அந்தச் சம்பவம் நடந்தபோது அமெரிக்காவில் இருந்த அவர், அங்கிருந்தே கண்டித்திருக்க முடியாதா? கண்டித்துவிட்டு, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால், அது பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img