கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி: தில்லி போலீஸார் சோதனைக்கு உம்மன் சாண்டி கண்டனம்

புது தில்லி:

தில்லியில் உள்ள கேரள இல்லத்தின் உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு தில்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள அரசின் விருந்தினர் இல்லமான கேரள இல்லம் உள்ளது. இங்குள்ள உணவகத்தில் வெளி ஆட்களும் சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படுவதாக தில்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை புகார் வந்தது. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்.

தில்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரள இல்லம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்பட்டதாக வெளியான தகவலை கேரள அரசு நேற்று திட்டவட்டமாக மறுத்தது.

கோழிக்கோட்டில் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள இல்லம் தனியார் ஹோட்டல் அல்ல. லாப நோக்கத்துடன் நடத்தும் நிறுவன மும் அல்ல. இது மாநில அரசின் விருந்தினர் இல்லம். இங்கு போலீஸ் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. சோதனை நடத்தும் முன்பு தில்லி போலீஸார் சற்று நிதானத்தை கையாண்டிருக்கலாம். உள் துறை அமைச்சகத்திடம் தகவல்களை பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். மாட்டிறைச்சி தடை தொடர்பாக சிலர் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்” என்றார்.

இதுதொடர்பாக கேரள தலைமைச் செயலாளர் ஜிஜி தாமஸ் நேற்று தில்லி யில் கூறும்போது, “கேரள இல்லத்தின் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமை இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் மாட்டிறைச்சி என்று கூறப்பட்டுள்ளது.

கேரள இல்லத்தில் உள்துறை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி தில்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். தில்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். என்றாலும் நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார்.

பிரதமருக்கு கடிதம்:

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், “கேரள இல்லத்தின் உணவகத்தில் தில்லி போலீஸார் சோதனை நடத்தியது மிகவும் ஆட்சேபனைக்குரியது. அவர்கள் அதிகார வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். தவறான தகவலின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் அனுமதி பெறாமல், அல்லது முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கேஜ்ரிவால் கண்டனம்:

சோதனை நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “கேரள இல்லத்தில் தில்லி போலீஸார் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. கேரள இல்லம் ஓர் அரசுக்குச் சொந்தமானது. தில்லி போலீஸ் கேரள இல்லத்துக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். பாஜக தொண்டர்களைப் போல தில்லி போலீஸ் நடந்துகொள்கிறது” என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, மார்க்சிஸ்ட் தலைவர் பினரயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தில்லி காவல்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories