ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுமி பலி : 15 பேர் படுகாயம்

 

இன்று அதிகாலை 4.30 மணி அளவில் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு பகுதியில் வந்தபோது,ஆம்னி பஸ் பஸ் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த ஜீவிதா (4) என்ற சிறுமி பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது தாயார், நிகிலா (39), தந்தை சுரேஷ் பாபு (45)
அக்கா மணிஷியா (8) மற்றும் பயணிகள் தனபால் (25), அய்யப்பன் (27), சர்மா (25), பஸ் டிரைவர்கள் சேகர், சந்திரசேகர் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

பெங்களூரில் இருந்து புதுவைக்கு நேற்று இரவு 11 மணி அளவில் படுக்கை வசதிகளுடன் கூடிய ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டது. அதில் 31 பயணிகள் பயணம் செய்தனர். திருவண்ணாமலையை அடுத்த காஞ்சியை சேர்ந்த டிரைவர் சத்தியசேகர் (வயது 38) பஸ்சை ஓட்டினார்.

இன்று அதிகாலையில் திருவண்ணாமலை வந்தவுடன் சந்திரசேகர் பஸ்சை நிறுத்தி ஓய்வெடுத்தார். எனவே, மாற்று டிரைவரான செங்கத்தை சேர்ந்த சேகர் (41) பஸ்சை ஓட்டினார்.

விபத்தை அறிந்ததும் அந்த வழியாக வாகனத்தில் வந்த சிலர் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே காவல் துறையினர் விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செஞ்சி, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக காயமடைந்தவர்களில் பலர் புதுவை ஜிப்மர் மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறுமி ஜீவிதாவின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.சிறுமி ஜீவிதா தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து புதுவைக்கு சுற்றிப்பார்க்க பஸ்சில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கி குடும்பத்தினர் கண்முன்பு பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் பாதித்திருந்த போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.விபத்து குறித்து நல்லான் பிள்ளைபெற்றாள் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories