ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுமி பலி : 15 பேர் படுகாயம்

Published:

 

இன்று அதிகாலை 4.30 மணி அளவில் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு பகுதியில் வந்தபோது,ஆம்னி பஸ் பஸ் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த ஜீவிதா (4) என்ற சிறுமி பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது தாயார், நிகிலா (39), தந்தை சுரேஷ் பாபு (45)
அக்கா மணிஷியா (8) மற்றும் பயணிகள் தனபால் (25), அய்யப்பன் (27), சர்மா (25), பஸ் டிரைவர்கள் சேகர், சந்திரசேகர் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

பெங்களூரில் இருந்து புதுவைக்கு நேற்று இரவு 11 மணி அளவில் படுக்கை வசதிகளுடன் கூடிய ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டது. அதில் 31 பயணிகள் பயணம் செய்தனர். திருவண்ணாமலையை அடுத்த காஞ்சியை சேர்ந்த டிரைவர் சத்தியசேகர் (வயது 38) பஸ்சை ஓட்டினார்.

இன்று அதிகாலையில் திருவண்ணாமலை வந்தவுடன் சந்திரசேகர் பஸ்சை நிறுத்தி ஓய்வெடுத்தார். எனவே, மாற்று டிரைவரான செங்கத்தை சேர்ந்த சேகர் (41) பஸ்சை ஓட்டினார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

விபத்தை அறிந்ததும் அந்த வழியாக வாகனத்தில் வந்த சிலர் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே காவல் துறையினர் விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செஞ்சி, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக காயமடைந்தவர்களில் பலர் புதுவை ஜிப்மர் மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறுமி ஜீவிதாவின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.சிறுமி ஜீவிதா தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து புதுவைக்கு சுற்றிப்பார்க்க பஸ்சில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கி குடும்பத்தினர் கண்முன்பு பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் பாதித்திருந்த போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.விபத்து குறித்து நல்லான் பிள்ளைபெற்றாள் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img