தீபாவளி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவெளி மாநில 600 மது பாட்டில்கள் பறிமுதல் : 2 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த வெகு நாட்களாக மாநகர காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

இதையடுத்து மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில் சாமி தலைமையில் இரவு நேரங்களில் வாகனங்களில் மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா? மேலும் வேறு எங்காவது பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா? என்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் மயில்சாமி தலைமையில் போலீசார் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டவர்த் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சோமரசம் பேட்டை சீரா தோப்பு பகுதியை சேர்ந்த சிவசங்கரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் மறைத்து வைத்து மது பாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் உள்ள ஒரு அறையில் தீபாவளி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 750 மி.லி கொள்ளளவு கொண்ட 600 கர்நாடக மாநில மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த அருள்முருகன், கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி காவல்துறையினர் வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories