மைனர் பெண்ணை கடத்தி, திருமணம் செய்த கட்டுமானத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: ரூ. 1 லட்சம் அபராதம்

Published:

 ஈரோடு மாவட்டத்தில் 17 வயது மைனர் பெண்ணை கடத்தி மைசூரில் திருமணம் செய்துகொண்டவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், அருகே உள்ள சென்னிமலை பகுதியை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி சுரேஷ்(23). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை கடத்திச் சென்று மைசூரில் திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர், வேலூர் மாவட்டத்துக்கு திரும்பிவந்து அங்கு அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர், பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்த சுரேஷை கைது செய்ய வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வேலூருக்கு சென்று அவரை கைதுசெய்த காவல் துறையினர், அந்தப் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சுரேஷ் மீது ஆள்கடத்தல் மற்றும் மைனர் பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்தது, சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் .

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தநிலையில் அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி திருநாவுக்கரசு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் மற்றும் மைனர் பெண்ணை திருமணம் செய்தமைக்காக 2 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் இந்த ஆயுள் தண்டனையுடன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img