சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டதாக பலரால்
கூறப்படுபவர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி
சகிப்புத்தன்மை குறித்த அவர் கூறிய கருத்திற்காக, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும். மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை, ஷாரூக் கான் திருப்பியளிக்க வேண்டும் என்று சாத்வி தற்போது கூறியுள்ளார்.
மேலும் சாத்வி பிராச்சிதான், ஷாருக்கான் கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் முன்பு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன் கதை:-
மும்பையில் 50-வது பிறந்த நாளை ஷாருக்கான் நேற்று கொண்டாடினார். அப்போது இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கே கருத்து சுதந்திரம் உண்டு. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இந்நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும் தடைக்கற்களாக இருக்கும் என கூறி இருந்தார்.


