2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

 
 
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை விசாரணை நீதிமன்றம் இனி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் 2ஜி முறைகேடு விவகாரத்தில் தனக்கு குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இரண்டரை ஆண்டுகாலத்துக்கு முன் கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
சுமார் இரண்டரை ஆண்டுகாலத்துக்குப் பிறகு இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
 
கனிமொழி தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஏ.கே.சிக்ரி, மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இன்று வந்தது.
 
அப்போது சாட்சி விசாரணைகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது, கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை இனி விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றனர் நீதிபதிகள், .
 
“விசாரணை ஏறக்குறைய முடிந்து விட்டது. 2ஜி சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் சாட்சிகள் விசாரணை நிறைவடைந்தது என்று சமர்ப்பித்துள்ளார். இறுதி வாதங்களும் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில் இம்மனுவை கனிமொழியின் நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி தத்து கூறினார்.
 
ஆனால், மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண், கனிமொழியின் மனு இரண்டரை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தினால் நிலுவையில் வைக்கப்பட்டது என்று வருத்தம் தெரிவித்தார்.
 
தனது கட்சிக்காரர் கனிமொழிமீதான சந்தேகம் ஊர்ஜிதமாகாமல் கிரிமினல் குற்றம் சுமத்தப்பட முடியாது. இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எதிராக இம்மியளவுக்குக் கூட சந்தேகம் இல்லை என்று கூறினார்.
 
2ஜி முறைகேட்டில் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து கனிமொழி ஜூலை 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்கள் குழுவில் 2007 ஜூன் 6 முதல் ஜூன் 20ம் தேதி வரை இரண்டு வார காலங்களுக்கு மட்டுமே தான் இருந்ததாக மனுவில் கனிமொழி கூறியிருந்தார்.
 
மேலும் தான் எந்தக் காசோலையிலும் கையெழுத்திடவில்லை என்றும், தான் எந்தவித பண ஆதாயத்தையும் பெறவில்லை என்றும் தன் மனுவில் கூறியிருந்தார்.
 
அத்துடன், தான் 20% பங்குகளை மட்டுமே வைத்திருந்ததாகவும், எனவே நிறுவனத்தின் மீது எழும் நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பங்குதாரரை தொடர்புபடுத்த முடியாது என்றும் கூறியிருந்தார்.
 
டிசம்பர் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரை நடைபெற்றுள்ள நிதிநடவடிக்கைகள் குறித்தே தற்போது விவகாரம் எழுந்துள்ளது. ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் தான் ராஜினாமா செய்து 18 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது என்றும் கனிமொழி தாக்கல் மனுவில் மனுவில் கூறியிருந்தார்.
ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories