2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

 
 
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை விசாரணை நீதிமன்றம் இனி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் 2ஜி முறைகேடு விவகாரத்தில் தனக்கு குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இரண்டரை ஆண்டுகாலத்துக்கு முன் கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
சுமார் இரண்டரை ஆண்டுகாலத்துக்குப் பிறகு இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
 
கனிமொழி தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஏ.கே.சிக்ரி, மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இன்று வந்தது.
 
அப்போது சாட்சி விசாரணைகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது, கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை இனி விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றனர் நீதிபதிகள், .
 
“விசாரணை ஏறக்குறைய முடிந்து விட்டது. 2ஜி சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் சாட்சிகள் விசாரணை நிறைவடைந்தது என்று சமர்ப்பித்துள்ளார். இறுதி வாதங்களும் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில் இம்மனுவை கனிமொழியின் நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி தத்து கூறினார்.
 
ஆனால், மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண், கனிமொழியின் மனு இரண்டரை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தினால் நிலுவையில் வைக்கப்பட்டது என்று வருத்தம் தெரிவித்தார்.
 
தனது கட்சிக்காரர் கனிமொழிமீதான சந்தேகம் ஊர்ஜிதமாகாமல் கிரிமினல் குற்றம் சுமத்தப்பட முடியாது. இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எதிராக இம்மியளவுக்குக் கூட சந்தேகம் இல்லை என்று கூறினார்.
 
2ஜி முறைகேட்டில் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து கனிமொழி ஜூலை 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்கள் குழுவில் 2007 ஜூன் 6 முதல் ஜூன் 20ம் தேதி வரை இரண்டு வார காலங்களுக்கு மட்டுமே தான் இருந்ததாக மனுவில் கனிமொழி கூறியிருந்தார்.
 
மேலும் தான் எந்தக் காசோலையிலும் கையெழுத்திடவில்லை என்றும், தான் எந்தவித பண ஆதாயத்தையும் பெறவில்லை என்றும் தன் மனுவில் கூறியிருந்தார்.
 
அத்துடன், தான் 20% பங்குகளை மட்டுமே வைத்திருந்ததாகவும், எனவே நிறுவனத்தின் மீது எழும் நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பங்குதாரரை தொடர்புபடுத்த முடியாது என்றும் கூறியிருந்தார்.
 
டிசம்பர் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரை நடைபெற்றுள்ள நிதிநடவடிக்கைகள் குறித்தே தற்போது விவகாரம் எழுந்துள்ளது. ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் தான் ராஜினாமா செய்து 18 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது என்றும் கனிமொழி தாக்கல் மனுவில் மனுவில் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories