பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தமிழக காவல்துறையினர் கொலை வெறி தாக்குதல்

 
 
திருச்சி மாவட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்புஅவரது வீட்டில் அதிரடியாக நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
மக்களுக்கான விழிப்புணர்வு பாடல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்களை தூண்டி விடுவதாக கூறி அவர் மீது தேச பாதுகாப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் அவர் கொடைக்கானலில் உள்ள வன விலங்கு சரணாலயத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் அங்குள்ள பழங்குடியினரை இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறியதால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவன் பாடிய பாடல்கள் மக்களை போராடுவதற்க்கு தூண்டிவிடுவதாக கூறி அவர் மீது நேற்று இரண்டு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
காவல்துறையினரால் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் மதுகடைகளை இழுத்து மூட வலியுறுத்துவது குற்றமா? என்று தமிழக அரசிற்க்கு கேள்வி எழுப்பியுள்ளனர்
 
 
இந்த நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்துவதற்கு முறைப்படி கோட்டை காவல்நிலையத்தில் அனுமதி பெற்று இருந்தனர்.
ஆனால் இன்று காலை காவல்துறையினர் தீடீர் என ஆர்பாட்டம் நடத்த கொடுத்த அனுமதியை ரத்து செய்தனர்.ஆர்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருக்கும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
மேலும் காவல்துறையினர் அவர்களுக்கு ஒலி பெருக்கிகளை வைக்க அனுமதி அளிக்காததால் தங்களுடைய போராட்டத்தை தீவிர படுத்திய போராட்டகாரர்கள் போராட்டம் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர்
ஆர்பாட்டகாரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 92 பேரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது.
 
 
 
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏன் ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தீர்கள் என்று காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பி அனுமதி மறுப்பு
மற்றும் தாக்குதலை கண்டித்து திருமண மண்டபத்தில்உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 
 
இதனால் கோட்டை காவல்நிலைய அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு உள்ளனர்.
 
பாடகர் கோவன் கைது செய்ததை கண்டித்து மீண்டும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை காவல்துறையினரிடம் வைத்து கைது செய்யப்பட்ட திருமண மண்டபத்திலே உண்ணாநிலையில் போராட்டகாரர்கள் இருந்து வருவதால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories