காதல் கிசுகிசுவில் சிக்கிய தமிழ் சினிமா நட்சத்திர ஜோடிக்கு திருமணம் ?

Published:

தமிழ் திரை உலகில் எந்த ஒரு ஜோடி காதல் கிசுகிசுவால் பேசப்படுகிறார்களோ அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் – மனைவியாக மாறுவது ஒன்றும் ஆச்சிரியம் அல்ல .
 
ஏற்கனவே சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி போன்ற பலர் காதல் கிசுகிசுவால் பேசப்பட்டு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.காதல் கிசுகிசுவால் சமீபத்தில் பேசப்பட்டவர்கள்தான் திரை உலகை சேர்ந்த ஜிகர்தண்டா பாபி சிம்ஹாவும், கிருமி ரேஷ்மி மேனனும்தான்.
 
இருவரும் உறுமீன் படத்தில் இணைந்து நடிக்கும்போது இவர்களுக்குள் காதல் வளர்ந்ததாக கூறப்படுகிறது.காதலர்களாகிய பாபி – ரேஷ்மிக்கும் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம்.நிச்சயதார்த்த வேலைகளை இருவரின் பெற்றோர்கள் மிக கமுகக்மாக செய்து கொண்டுள்ளனரா ம்.
 
நடைபெற உள்ள நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்களாம்.இந்த நிலையில் பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் இணைந்து நடித்துள்ள உறுமீன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடதக்கது.
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img