தமிழ் திரை உலகில் எந்த ஒரு ஜோடி காதல் கிசுகிசுவால் பேசப்படுகிறார்களோ அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் – மனைவியாக மாறுவது ஒன்றும் ஆச்சிரியம் அல்ல .
ஏற்கனவே சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி போன்ற பலர் காதல் கிசுகிசுவால் பேசப்பட்டு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.காதல் கிசுகிசுவால் சமீபத்தில் பேசப்பட்டவர்கள்தான் திரை உலகை சேர்ந்த ஜிகர்தண்டா பாபி சிம்ஹாவும், கிருமி ரேஷ்மி மேனனும்தான்.
இருவரும் உறுமீன் படத்தில் இணைந்து நடிக்கும்போது இவர்களுக்குள் காதல் வளர்ந்ததாக கூறப்படுகிறது.காதலர்களாகிய பாபி – ரேஷ்மிக்கும் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம்.நிச்சயதார்த்த வேலைகளை இருவரின் பெற்றோர்கள் மிக கமுகக்மாக செய்து கொண்டுள்ளனரா ம்.
நடைபெற உள்ள நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்களாம்.இந்த நிலையில் பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் இணைந்து நடித்துள்ள உறுமீன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடதக்கது.


