தர்மபுரி மாவட்டத்தில் நடந்த, நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக அரசு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், வரும் 24ம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த, அக்டோபர் 24ம் தேதி தர்மபுரியில் நடந்த, தே.மு.தி.க-வின், ‘மக்களுக்காகமக்கள் பணி’ என்ற நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக, மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் அசோகன், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த, 30ம் தேதி வழக்கு தொடர்ந்தார். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் இவ்வழக்கு தொடர்பாக, விஜயகாந்த், வரும், 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி சுபாதேவி நேற்று உத்தரவிட்டுள்ளார்.


