முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி விஜயகாந்த் அவதூறு பேசியதாக வழக்கு

Published:

 
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த, நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக அரசு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், வரும் 24ம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த, அக்டோபர் 24ம் தேதி தர்மபுரியில் நடந்த, தே.மு.தி.க-வின், ‘மக்களுக்காகமக்கள் பணி’ என்ற நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது.
 
விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக, மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் அசோகன், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த, 30ம் தேதி வழக்கு தொடர்ந்தார். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் இவ்வழக்கு தொடர்பாக, விஜயகாந்த், வரும், 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி சுபாதேவி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img