95-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி

12 June02 Karanuna - 2026இந்திய நிலப்பரப்பில் இன்றைக்கு வாழும் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி வரும் ஜூன் 3-ந் தேதி 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவரான கருணாநிதி. நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார்.

1930களிலேயே தம்முடைய மாணவர் பருவத்திலேயே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போதைய நீதிக்கட்சி, பின்னர் திராவிடர் கழகம் என திராவிடர் இன விடுதலைக்கான பயணத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டில் துணை ஆசிரியராக ஈரோட்டில் சிறிது காலமும் பணிபுரிந்தார் கருணாநிதி.

1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அப்போது அண்ணா தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருணாநிதி உருவெடுத்தார்.

1952ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலை திமுக புறக்கணித்தது.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 2-வது மாநில மாநாட்டில் தேர்தல்களில் பங்கேற்பது என திமுக முடிவெடுத்தது. 1957ம் ஆண்டு முதல் 13 சட்டசபை தேர்தல்களில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார். இந்த 13 சட்டசபை தேர்தல்களிலுமே வென்று சாதனை படைத்தவர் கருணாநிதி.

1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சாவூர், 1967, 71-ல் சைதாப்பேட்டை, 1977, 80-ல் அண்ணா நகர், 1989, 91-ல் துறைமுகம்; 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கருணாநிதி. 2011, 16-ம் ஆண்டுகளில் திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1967-ம் ம் ஆண்டு திமுக வென்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்த போது பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் கருணாநிதி. 1969-ல் அண்ணா மறைந்தபோது முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்றார்.

1971-76; 1989-91; 1996-2001; 2006-2011 என 5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார் கருணாநிதி. முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் கருணாநிதி. ஆனாலும் தமிழகம், இந்திய அளவிலான அரசியல் நிகழ்வுகள் பல முறை கருணாநிதி தீவிர அரசியலில் இல்லையே என மக்களை ஏங்க வைத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories