தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- மக்கள் ஒருங்கிணைப்பு குழு இன்று விசாரணை

13 June02 gun shooting - 2026தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மூத்த வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடியில் இந்த அமைப்பு சார்பில் மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி டிபென் பேசுகையில், “தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, அதனை தேசிய, மாநில மனித உரிமை ஆணையத்தில் வழங்கவும், ஐ.நா சபையில் அறிக்கை அளிக்கவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 2 நாட்களாக, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்டறிந்து வந்தனர்.

இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை தூத்துக்குடி பெல் ஓட்டலில் மக்கள் விசாரணை நடக்க உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கலவரம் தொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோல்சே பட்டேல், அரிபரந்தாமன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காந்தி, தேவசகாயம் உள்ளிட்ட 24 பேர் கலந்து கொண்டு மனுக்களை பெறுகின்றனர். இவை அனைத்தும் அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 16-ந்தேதி ஐ.நா.சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. எனவே மக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை மனுவாக கொடுத்து மனித உரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories