சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று உரையாற்றிய தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
சென்னை மியூசிக் அகாடமியில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக நாராயணனுக்கு எதிராக சில அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாராயணன் இலங்கைப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து புறப்படும் நேரத்தில் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்கப்பட்டார். காவல் துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததாலும் அரங்கில் முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் வரிசையில், போலியான பெயரில் பதிவு செய்து அமர்ந்திருந்த நபர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த நபரின் உண்மையான பெயர் பிரபாகரன் என்றும் தெரிகிறது.
எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப் பட்ட போதிலும், எவ்விதசலன மும் இன்றி, இயல்பான மன நிலையிலேயே நாராயணன் காணப்பட்டார். பிறகு புன்முறுவலுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.தாக்குதலில் ஈடுபட்ட நபரை ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவரது அரசியல் கட்சியை சேர்ந்தவரா என்றும் அவரை குறித்தான முழு விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும், 15 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


