தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தியவர் கைது

Published:

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று உரையாற்றிய தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
சென்னை மியூசிக் அகாடமியில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக நாராயணனுக்கு எதிராக சில அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நாராயணன் இலங்கைப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து புறப்படும் நேரத்தில் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்கப்பட்டார். காவல் துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததாலும் அரங்கில் முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் வரிசையில், போலியான பெயரில் பதிவு செய்து அமர்ந்திருந்த நபர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த நபரின் உண்மையான பெயர் பிரபாகரன் என்றும் தெரிகிறது.
 
எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப் பட்ட போதிலும், எவ்விதசலன மும் இன்றி, இயல்பான மன நிலையிலேயே நாராயணன் காணப்பட்டார். பிறகு புன்முறுவலுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.தாக்குதலில் ஈடுபட்ட நபரை ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இவரது அரசியல் கட்சியை சேர்ந்தவரா என்றும் அவரை குறித்தான முழு விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும், 15 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img