நமக்கு நாமமே : ஸ்டாலினை கிண்டல் செய்த பிரேமலதா

Published:

images tamilnadu premalatha - 2026

நாமக்கல்:

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் வகையில் சைக்கிள் ஓட்டி வித்தை காட்டும் ஒருவர் “நமக்கு நாமமே” என்பதை உணர வேண்டும் என்று பிரேமலதா, திமுக., பொருளாளர் மு.க. ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்து பேசினார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

“நான் யாரையும் குறை கூறி ஓட்டு கேட்கவில்லை. ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக தேமுதிக.,வுக்கு வாக்களிக்கச் சொல்கிறேன். தமிழகத்தில் ஒருவர் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கிறேன் என்று சைக்கிள் ஓட்டி வித்தை காட்டுகிறார். ஆனால் நமக்கு நாமமே என்பதை அவர் உணர வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது டைரியில் போலிஸ் துணை சூப்பிரண்டு என்றால் டம்மி என்று எழுதி வைத்திருக்கிறார். இதிலிருந்தே அவர் எந்தளவுக்கு மேல்அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலை எனில், சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று மக்கள் யோசிக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்” என்று கூறினார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img