வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்தில் முதியவர் பலி : மூவர் கைது

Published:

கோவையில் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானர். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, செல்வபுரம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர் பிரதான சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வசித்து வருபவர் தேவி. அவரது மகன் நவீன் (19). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

தேவியின் வீடு இரண்டுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதியில் தேவியும் அவரது மகனும் வசித்துள்ளனர். மற்றொரு பகுதியில் தேவியின் தந்தை சண்முகம், சகோதரி துளசிமணி, கணவர் சிவக்குமார் வசித்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சண்முகத்தின் வீட்டுக்கு வெளியூரிலிருந்து புதிய நபர்கள் சிலர் சிவக்குமாருடன் வந்து சென்றுள்ளனர்.

வியாழக்கிழமை காலை சிவக்குமார் முதியவர் ஒருவரை சண்முகத்தின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அன்று காலை 11 மணிக்கு மேல் சண்முகம் வசித்த வீட்டில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

வெடி விபத்தால் சண்முகம் மற்றும் தேவி வசித்த வீட்டின் இரு பகுதிகளும் வெடித்து சிதறி தரைமட்டமாயின. வீட்டின் இருபக்கங்களிலும் உள்ள வீடுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து சேதமாகின.

வெடி சப்தம் கேட்டு அருகில் வசிப்போர் சென்று பார்த்தபோது, வெடி விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அருகில் நாயும் இறந்து கிடந்தது. மேலும் தேவியின் மகன் நவீன் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவலறிந்த கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் ரம்யாபாரதி, உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட போலீஸார் மற்றும் கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குநர் எம்.சாகுல் அமீது, கோவை கோட்ட அலுவலர் சந்திரன் உள்ளிட்டோர் வெடி விபத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் சோதனை செய்தனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடைபெற்றது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து லாலா பட்டாசு எனப்படும் அதிக சப்தம் தரும் வெடிகள், வெடி மருந்துரசாயன பொருள்கள், அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட். அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சிவகுமார், துளசிமணி, சண்முகம், தேவி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 (ஏ) அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் 286 வெடிபொருளை வைத்து அலட்சியமாக நடந்து கொள்ளுதல் மற்றும் வெடிமருந்து தடை சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவகுமார் தவிர மற்ற மூவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவகுமார் காவல் துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து காவல் துறையினர்கூறுகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக அந்த வீட்டில் முறைகேடாக வெடிகளை சிவகுமார் வாங்கி வைத்திருந்துள்ளார். அங்கு பட்டாசு தயாரிக்கும் போதே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்கள் தலைமறைவாக உள்ள சிவகுமார் பிடிபடும்போதே மட்டுமே தெரியும். இறந்தவர் யார் என்பதும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறையினர் கூறினர்

கடந்த 2011-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக சிவகுமார் மீது ஏற்கெனவே செல்வபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img