இந்தியாவில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது என்று முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நடைபெற்ற நிகழ்ச்சியி சிறப்புரையில் பேசியதாவது:
நாட்டில் சிந்தனை,சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது.எழுத்தாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது. நாட்டில் அமைதி இல்லையென்றால், சுதந்திரம் இருக்க வாய்ப்பில்லை,அதேபோல் சுதந்திரம் இல்லாமல் அமைதி இல்லை என்று மன்மோகன் சிங் கூறினார்.


