பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் இன்று இறந்தார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(34). இவரது சகோதரர் முத்துக்குமார்(27). இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் செல்லத்தாயார்புரம் சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.
திருநெல்வேலி – தென்காசி சாலையில் மகிழ்வண்ணநாதபுரம் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வரும்போது எதிரே வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சக்கரவர்த்தி தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி இறந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுனரான சேரன்மகாதேவியைச் சேர்ந்த வா.இசக்கிதாஸ்(28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்
பாவூர்சத்திரம் அருகே பைக் மீது வேன் மோதல்: இளைஞர் சாவு
Popular Categories


