பாவூர்சத்திரம் அருகே பைக் மீது வேன் மோதல்: இளைஞர் சாவு

Published:

பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் இன்று இறந்தார்.
  பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(34). இவரது சகோதரர் முத்துக்குமார்(27). இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் செல்லத்தாயார்புரம் சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.
 திருநெல்வேலி – தென்காசி சாலையில் மகிழ்வண்ணநாதபுரம் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வரும்போது எதிரே வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  இதில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சக்கரவர்த்தி தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் இன்று   சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி இறந்தார்.
  இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுனரான சேரன்மகாதேவியைச் சேர்ந்த வா.இசக்கிதாஸ்(28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img