திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இ-சேவை மையம் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்

Published:

நெல்லை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
 
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை பொது இ-சேவை மையத்தில் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தார். அப்போது எந்தெந்த சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளது. யாரிடம் நிலுவையில் உள்ளது என்பது போன்ற நிலை குறித்து கேட்டறிந்தார். இதுதொடர்பாக இ-சேவை மைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு தாசில்தாரை கேட்டுக்கொண்டார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கருணாகரன் கூறியது, நெல்லை மாவட்டத்தில் 12 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் 25 பேருக்கு பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது. மையங்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 457 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
 
இதன்பின்னர் பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் கருணாகரன்,  ரெட்டியார்பட்டி, முன்னீர்பள்ளம், தருவை, மைலாக்களம், ஆலங்குளம் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டார். அப்போது ஆட்சியருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் விஜயகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திகேயன், பாளையங்கோட்டை தாசில்தார் கிறிஸ்டாேபர், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணா ஆகியோர் உடன் சென்றனர்.
ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img