தமிழகத்தில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்காது என தமிழக பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, நரேந்திர மோடி கலந்து கொண்டதால்தான் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற்றுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக விரும்பி சேர்ந்துள்ளனர். பாமகவும், தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணியில் தான் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு இன்னும் முடிவு செய்யவில்லை.
தமிழகத்தில், வரும் சட்ட மன்ற தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தான் வலிமையான கூட்டணியை அமைப்போம். எந்த சூழ்நிலையிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று கூறினார் பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ்.


