தமிழகத்தில் அதிமுகவுடன் எந்த சூழ்நிலையிலும் பாஜக கூட்டணி அமைக்காது : முரளிதரராவ்

Published:

 

தமிழகத்தில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்காது என தமிழக பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, நரேந்திர மோடி கலந்து கொண்டதால்தான் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக விரும்பி சேர்ந்துள்ளனர். பாமகவும், தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணியில் தான் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு இன்னும் முடிவு செய்யவில்லை.

தமிழகத்தில், வரும் சட்ட மன்ற தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தான் வலிமையான கூட்டணியை அமைப்போம். எந்த சூழ்நிலையிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று கூறினார் பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img