சேற்றில் செயல்பட்டு வரும் காந்தி சந்தை: ?

அடிப்படை வசதிகள் இல்லாமலும், மழைக் காலங்களில் சேற்றிலும் செயல்பட்டு வரும் காந்தி சந்தை பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 காய்கறி உற்பத்திக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரத்துக்கு அடுத்த படியாக, மிகப் பெரியது திண்டுக்கல் காந்தி சந்தை. தற்போது 365 கடைகள் இங்கு செயல்பட்டு வந்தாலும் 160 கடைகள் மார்க்கெட்டுக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் காந்தி சந்தை பகுதியில், சிறைச்சாலை, வட்டாட்சியர் அலுவலகம், மேல்நிலைப் பள்ளி, கோட்டை மாரியம்மன் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், பூங்கா போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ளதால், அதிகமான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சேறும், சகதியுமான இடத்தில் விற்பனை:திண்டுக்கலில் சிறிது நேரம் மழை பெய்தாலும், மார்க்கெட் பகுதி சகதியாக மாறி விடுகிறது. இதனால், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், உள்ளே நுழைய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதுபற்றி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பழனிச் சாலையில் உள்ள லாரி பேட்டைக்கு சந்தையை இடம் மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு பல மாதங்களுக்கு பின்னும், இதுவரை இடம் மாற்றம் செய்யப்பட வில்லை. அதே போல், காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

 இதுகுறித்து  வியாபாரிகள் சங்கத் தலைவர் துரை.சம்பத்திடம் கேட்ட போது:

 நாளொன்றுக்கு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் காந்தி சந்தை மூலம், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனாலும், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. லாரி பேட்டையில், 350 கடைகள் அமைக்க இடவசதி இல்லை. மேலும், அந்த இடத்தில் சந்தை அமைந்தால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. எனவே புறநகர் பகுதியில் இடம் வழங்கினால், அங்கு செல்ல தயாராக உள்ளோம் என்றார்.

ஆணையர் நா.மனோகர்: லாரி பேட்டை பகுதியில், வியாபாரிகளுக்கு குறைந்த பட்ச இடம் வழங்க முடியும். அதனைவிடுத்து, ஒவ்வொருவரும் தேவைக்கு ஏற்ற இடம் கேட்பதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. குடிநீர், கழிப்பறை போன்ற கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி தயாராக உள்ளது.

லாரி பேட்டைக்கு மாறினால், சேற்றில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படாது என்பதை வியாபாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories