அரசு கல்லூரி ஆசிரியர்கள் அலட்சிய போக்கால் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை: மறுகூட்டலில் முதல் மாணவனாக தேர்ச்சி

Published:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த முஹம்மது அட்னான் ஹிலால்(17), தேர்வில் தோல்வி அடைந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டான்.

நன்கு படிக்கும் மாணவனான ஹிலால், இயற்பியல் பாடத்தில் வெறும் 28 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்றதாக இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்து கவலை அடைந்து ஆற்றில் விழுந்து கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டான்.

ஹிலாலின் முடிவால் கவலையில் ஆழ்ந்த அவரது தந்தை, மறுகூட்டல் செய்யுமாறு விண்ணப்பித்தார். இயற்பியல் விடைத்தாளை மறுகூட்டல் செய்தபோது, அதில் 48 மதிப்பெண்கள் அதாவது 70 சதவிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹிலாலின் தந்தை, விடைத்தாளை அலட்சிய போக்காக திருத்திய ஆசிரியர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img