நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், தமிழகத்தில் முழுவதும், 365 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் 41 ஆற்றுப் பாலம் மற்றும் மூன்று மேம்பாலம்; மூன்று ரயில்வே மேம்பாலம்; ஒரு ரயில்வே கீழ் பாலம் ஆகியவை 365 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


