சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்தை சரமாரியாக தாக்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக கட்சியியை சேர்ந்த பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்து மற்றும் விஜயகாந்த்தின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக இன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்துவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திடீரென சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரையும் விஜயகாந்த் கோபத்தில் உதைத்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்பட்டது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்திற்கு வந்த விஜயகாந்த் மழை பெய்ய ஆரம்பிக்கவே அவசர அவசரமாக நிவாரண பணிகளை முடித்துவிட்டு தன்னுடைய பிரச்சார வாகனத்தில் ஏறினார். அப்போது மாவட்ட செயலாளரும், பண்ருட்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான சிவகொழுந்து விஜயகாந்த் பின்னாலேயே அதே வாகனத்தில் ஏறப்போனார்.

இதில் கடுப்பாகிப்போன விஜயகாந்த் சிவகொழுந்து தலையில் பளீர்…. பளீர்… என்று நான்கு வைத்துவிட்டு, நாக்கை நாக்கை கடித்துக்கொண்டு அதன்பின் கோபம் குறையாத அவர், ”சீக்கிரம் வண்டியை எடுடா” என்று வாகனத்தி ல்இருந்த ஓட்டுனரை காலால் உதைத்ததும் வேன் விர் என்று கிளம்பியது. இதைப்பார்த்த கட்சிக்காரர்களும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

விஜயகாந்த்திடம் சிவகொழுந்து அடி வாங்கியிருப்பதால் அடுத்து அண்ணனுக்கு அமைச்சராகும் யோகம் இருக்கிறது என்று சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிவகொழுந்தின் ஆதரவாளர்கள் பரவலாக பேசினர்.

பொதுவாக விஜயகாந்த் பொது இடங்களில் கோபப்பட்டு கட்சியினரை அடிப்பது வழக்கமாக ஒன்றுதான். அதேபோல் செய்தியாளர்களிடமும் பாயக் கூடியவர்..

இந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு வார காலம் கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டு நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தார் விஜயகாந்த்.

இந்நிலையில் மீண்டும் கோபத்துடன் சட்ட மன்ற உறுப்பினரை விஜயகாந்த் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories