தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலத்து கொள்ளும் சில நிகழ்சிக்களில் திடீர் திடீர் என மிகுந்த கோபத்துடன் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் அடைந்து ஒரு சிலரை சில நேரங்களில் எப்போதாவது தாக்குதல் நடத்துவதை அனைவரும் அறிந்ததே.
அதேபோல் இன்று விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது தேமுதிக கட்சியியை சேர்ந்த பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்து மற்றும் விஜயகாந்த்தின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக இன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜயகாந்த் தாக்கிய சம்பவம் பெரும்பாலன ஊடகங்களில் அடிக்கடி வெளியானது. மேலும் சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவியது.
அவ்வாறு முகனூலில் பரவிய விஜயகாந்த் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்தான பலரது பதிவில் பலர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர்.
தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் திடீர் திடீர் என ஒரு சிலரை தாக்குதல் நடத்தும் காரணம் குறித்து மாலிக் அன்சாரி எனும் பெயர் கொண்ட அவரது முகனூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் தே.மு.தி.க கட்சியியை சேர்ந்தவராக இருக்க கூடும் .
அந்த பதிவில் மாலிக் அன்சாரி கூறியுள்ளதாவது :-
# ஊடகங்களுக்கு நன்றி…
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எம் தலைவர்#மனிதநேயர்_கேப்டன் அவர்கள் பஞ்சத்தில் சிக்கிய #கடலூர்மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை அள்ளி தந்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார், கழக தோழர்கள் அனுப்பிவைத்த புகைப்படத்தை வைத்து தான் அறிந்துக்கொண்டோம்….
#கேப்டன் அவர்கள் வழங்கிய பொருள்களை #மக்கள்_மகிழ்ச்சிபொங்க வாங்கிக்கொண்டார்கள் என்று எந்த ஊடகமும் தெரிவிக்கவில்லை…
ஆனால்…
திடீர் என்று #மக்கள்_அதிர்ச்சி என்று முக்கிய செய்தி ஓடுகிறது அனைத்து ஊடகங்களிலும்…
காரணம் #கேப்டன்_அடித்தாராம்…
அள்ளி தந்தை காட்டாத ஊடகம்…
ஆறுதல் சொன்னபோது காட்டாத ஊடகம்…
இப்போது காட்டுகிறது “கேப்டன் அடித்ததால்”…
மக்களின் உயிரை காப்பாற்றிய போது காட்டவில்லை…
எங்கள் எம்எல்ஏ உயிரை பணயம் வைத்து கேப்டன் அவர்கள் Action செய்த உடன் காட்டுகிறான் ஊடகம்…
கேப்டன் அவர்களின் தொண்டு உள்ளத்தை உலகத்திற்கு காட்ட உயிரையும் பணயம் வைக்க தயங்காதவர்கள் #தேமுதிகவினர்… #நன்றி…மாலிக் அன்சாரி. என கூறியுள்ளார்.
ஓகோ இதுக்குதான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலத்து கொள்ளும் சில நிகழ்சிக்களில் திடீர் திடீர் என மிகுந்த கோபத்துடன் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் அடைந்து ஒரு சிலரை சில நேரங்களில் எப்போதாவது தாக்குதல் நடத்தும் காரணமா ? சூப்பரோ சூப்பர்…
இதுவும் நல்லா வழியா தானே இருக்கு…!


