தமிழக பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், நான் துணை நிற்கிறேன் : முதலமைச்சர் ஜெயலலிதா

Published:

தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; உங்களுடன் நான் துணை நிற்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னையில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிற்பகலில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அவர் பொதுமக்களிடம் பேசுகையில், வடகிழக்குப் பருவ மழை துவங்கும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினேன். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

எனினும், 3 மாத காலமாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவ மழை ஒரு வார காலத்தில் பெய்திருப்பதால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், மழை நீர் தேங்குவது, சாலைகள் பாதிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை தடுத்திருக்க முடியாது.

இருந்தாலும், பாதிப்பை சரி செய்யும் பணியில் தமிழக அரசு உடனடியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். என்றும் உங்களுடன் நான் துணை நிற்கிறேன், தமிழக அரசு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img