மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மரவல்லிக் கிழங்குடன் மனு கொடுக்க வந்தால் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கணேசன் தலமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் மரவல்லி கிழங்குகளுடன் வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளதாவது :-
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மரவல்லிக் கிழங்கு அதிகமா எப்போதும் விவசாயம் செய்யப்படுகிறது. 2 ஆயிரம் ஏக்கரில் இந்த ஆண்டு சுமார் விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு மரவல்லிக் கிழங்கு தயாராக உள்ளது.
கடந்த ஆண்டு ஒரு விலை வைத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டும் மிகவும் குறைவாக வாங்க வருகிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படும். சேலத்தில் இது போன்ற பிரச்சணை எழுந்த போது அங்கு செல்வராசு என்ற அதிகாரி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தில் ஓரளவு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் அந்த விலை கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகவும் விலை குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் கிழங்குகள் அறுவடை செய்யாமல் பருவ மழைக்கு அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளால் கூறப்படுகிறது.
அதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்என்று அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.


