கிழங்குடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயிகள்

Published:

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மரவல்லிக் கிழங்குடன் மனு கொடுக்க வந்தால் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கணேசன் தலமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் மரவல்லி கிழங்குகளுடன் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளதாவது :-

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மரவல்லிக் கிழங்கு அதிகமா எப்போதும் விவசாயம் செய்யப்படுகிறது. 2 ஆயிரம் ஏக்கரில் இந்த ஆண்டு சுமார் விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு மரவல்லிக் கிழங்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு ஒரு விலை வைத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டும் மிகவும் குறைவாக வாங்க வருகிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படும். சேலத்தில் இது போன்ற பிரச்சணை எழுந்த போது அங்கு செல்வராசு என்ற அதிகாரி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தில் ஓரளவு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் அந்த விலை கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கவில்லை.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இந்த நிலையில்கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகவும் விலை குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் கிழங்குகள் அறுவடை செய்யாமல் பருவ மழைக்கு அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளால் கூறப்படுகிறது.

அதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்என்று அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img