ஐதராபாத்: லிஃப்ட் கதவில் தலை சிக்கி 3 வயது குழந்தை பலி

Published:

lift boy - 2026

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் லிஃப்ட் கதவில் தலை சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

அந்தக் குழந்தையின் ஆசிரியர், குழந்தைகளை முதல் மாடியில் இருந்து 3வது மாடிக்கு அழைத்துச் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் படித்து வந்தவர் சயீதா ஜெயினப்(வயது 3). இன்று காலை பள்ளியில் முதல் தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு மாணவ மாணவியரை ஆசிரியர் லிப்டில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது லிப்டின் கதவில் ஜெயினப் தலை சிக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img