
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் லிஃப்ட் கதவில் தலை சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
அந்தக் குழந்தையின் ஆசிரியர், குழந்தைகளை முதல் மாடியில் இருந்து 3வது மாடிக்கு அழைத்துச் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் படித்து வந்தவர் சயீதா ஜெயினப்(வயது 3). இன்று காலை பள்ளியில் முதல் தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு மாணவ மாணவியரை ஆசிரியர் லிப்டில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது லிப்டின் கதவில் ஜெயினப் தலை சிக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


