ஏ.டி.எம் இயந்திரத்தில் தீ விபத்து

Published:

 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடத்தில், சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.அந்த மையத்தில் காவலாளியாக சுவாமிநாதன் என்பவர் பணியில் இருந்துள்ளார்.

காலை, 6.50 மணிக்கு ஏ.டி.எம்.மையத்தில் இருந்த குளிரூட்டி இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், இயந்திரத்தில் கதவும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த காவலாளி மற்றும் பேருந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், ஏ.டி.எம். இயந்திரத்தில் தீப்பிடிக்காததால் அதில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான பணம் தப்பியது.

நடைபெற்ற சம்பவ இடத்தை கும்பகோணம் காவல்நிலைய உயர் அதிகாரிகள்பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img