தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடத்தில், சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.அந்த மையத்தில் காவலாளியாக சுவாமிநாதன் என்பவர் பணியில் இருந்துள்ளார்.
காலை, 6.50 மணிக்கு ஏ.டி.எம்.மையத்தில் இருந்த குளிரூட்டி இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், இயந்திரத்தில் கதவும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த காவலாளி மற்றும் பேருந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், ஏ.டி.எம். இயந்திரத்தில் தீப்பிடிக்காததால் அதில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான பணம் தப்பியது.
நடைபெற்ற சம்பவ இடத்தை கும்பகோணம் காவல்நிலைய உயர் அதிகாரிகள்பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


