கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி துளசி மாலை அணிந்து செவ்வாய்க்கிழமை விரதத்தைத் தொடங்கினர்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம்
முக்கியமாக கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி மாலை அணிவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதல் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
ஐயப்பன் கோயில் குருசாமி சிவதாஸ், பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ஐயப்பன் கோயிலில் 45 நாள்கள் நடைபெறும் மண்டல பூஜையும் தொடங்கியது.


