கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர்

Published:

கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி துளசி மாலை அணிந்து செவ்வாய்க்கிழமை விரதத்தைத் தொடங்கினர்.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம்

முக்கியமாக கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி மாலை அணிவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதல் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

ஐயப்பன் கோயில் குருசாமி சிவதாஸ், பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ஐயப்பன் கோயிலில் 45 நாள்கள் நடைபெறும் மண்டல பூஜையும் தொடங்கியது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img