சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான அணுகுமுறைக்கு தயாராக உள்ளதாக கூறினார்.
பசுமை வழிச்சாலை திட்டத்தை மிகப்பெரிய பிரச்சனையாக்க முயல்கின்றனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் சாலைத்திட்டங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் தேவை என முதலமைச்சர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

