February 21, 2026, 6:10 PM
29 C
Chennai

எட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

IMG 20180818 174829 - 2026

கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் பக்ரீத் குர்பானி கொடுக்க களை கட்டியதால் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ளது எட்டயபுரம். தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுசந்தைகளில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று,

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை என சுமார் 12 மாவட்டங்களை சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வருவது வழக்கம். ஒவ்வொரு வரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் சராசரியாக 3 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது.

IMG 20180818 174844 - 2026இந்நிலையில் வரும் 22ந்தேதி பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளதால் இன்று விற்பனை அமோமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது,

வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரம் ஆடுகள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்த பட்சமாக ரூ 3 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு ஆடுகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகளும், பொதுமக்களும் தெரிவித்தனர்.

ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது போல, ஆடுகள் வாங்க வந்த மக்களின் கூட்டமும் கடந்த ஆண்டை விட கணிசமான அளவு அதிகமாக காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதிக ஆடுகள் விற்பனை மற்றும் விலை அதிகம் என்பதால் இன்று மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இதனால் வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories