எட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

IMG 20180818 174829 - 2026

கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் பக்ரீத் குர்பானி கொடுக்க களை கட்டியதால் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ளது எட்டயபுரம். தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுசந்தைகளில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று,

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை என சுமார் 12 மாவட்டங்களை சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வருவது வழக்கம். ஒவ்வொரு வரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் சராசரியாக 3 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது.

IMG 20180818 174844 - 2026இந்நிலையில் வரும் 22ந்தேதி பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளதால் இன்று விற்பனை அமோமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது,

வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரம் ஆடுகள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்த பட்சமாக ரூ 3 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு ஆடுகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகளும், பொதுமக்களும் தெரிவித்தனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது போல, ஆடுகள் வாங்க வந்த மக்களின் கூட்டமும் கடந்த ஆண்டை விட கணிசமான அளவு அதிகமாக காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதிக ஆடுகள் விற்பனை மற்றும் விலை அதிகம் என்பதால் இன்று மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இதனால் வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories