கடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்! மீட்புப் பணிகளில் ராணுவம்!

kerala flood relief work1 - 2026

கடவுளின் சொந்த பூமி என்று வர்ணிக்கப் படும் கேரளத்தில் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதை அடுத்து ராணுவம் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

கேரள மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது திடீரெனப் பெய்த கன மழை. வழக்கம் போல் இந்த வருடமும் தென்மேற்குப் பருவ மழைக் காலம் கேரளத்தில் சாதாரணமாகத்தான் தொடங்கியது.

kerala flood 2 - 2026

இடையில் தீவிரமடைந்து, சில நாட்கள் மழை நின்றுபோய், மீண்டும் திடீரென அதி தீவிரமடைந்து பெய்த கன மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து, காட்டாற்று வெள்ளமென அனைத்து இடங்களுக்கும் பரவி, நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. இதனால் கட்டடங்கள் பல மண்ணில் சரிந்தன.

தற்போது கேரளத்தின் எர்ணாகுளம், இடுக்கி தவிர்த்த மற்ற மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இருந்தாலும் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

ALSO READ:  நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

keralaflood2 - 2026

324 பேர் இந்த வெள்ளத்தில் பலியாகியுள்ளதாக, முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நுற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

சாலைகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் பல வெள்ளம் வடிந்தாலும் தொடர்ந்து அங்கே தங்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன. மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. போக்குவரத்து சேவைகள் முடங்கிப் போயின.

இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது ராணுவம். முப்படைகள், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், மாநில அரசுகளின் பல்வேறு முகமைகளைச் சேர்ந்த குழுக்கள், மீனவர்கள், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட தன்னார்வலர்கள் என பலரும் சேர்ந்து நேற்று ஒரே நாளில் 4 மாவட்டங்களில் 82 ஆயிரம் பேரை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்டுள்ளனர்.

keralaflood - 2026

கடற்படையின் 42 அணிகள், ராணுவத்தின் 16 அணிகள், கடலோர காவல்படையின் 28 அணிகள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 39 அணிகள் என பரவலாகப் பிரிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 30 ரணுவ ஹெலிகாப்டர்கள், 320 படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. இருப்பினும் அவற்றின் எண்ணிக்கை போதாது என்றும், மேலும் ஹெலிகாப்டர்கள் தேவை என்றும் முதல்வர் பிணரயி விஜயன் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தேவையான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

 

இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த வீரர்கள், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டாவில் 500-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். ராணுவம் முழுவீச்சில் இறங்கி வெள்ளத்தால் சிக்கித் தவிப்போரை கரை சேர்த்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories