இனி இ-சேவை மையத்தில் பெறலாம் இ-அடங்கல்! சிட்டா, பட்டா போல் எளிதாகிறது!

esevai tamilnadu e1536025650465 - 2026

சென்னை: இனி ஆன்லைனிலேயே இ அடங்கல் பெறலாம். ஆன்லைனில் சிட்டா மற்றும் பட்டா பெறுவது எளிமையாக்கப்பட்டது போல, அடங்கல் பெறுவதற்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.

விவசாயிகள் அரசு மானியம், பயிர்க்கடன், மானிய விலை யில் உரம் பெறுதல், பயிர்க் காப்பீடு பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கும், நிலஅளவையின் போதும் தங்களின் விளை நிலத்துக்கான பட்டா, சிட்டா ஆகியவற்றை அளிப்பது கட்டாயத் தேவையாக உள்ளது. இவை தற்போது இ-சேவை மையம் மூலமாகவே எளிதில் வழங்கப்படுகிறது.

தற்போது அடங்கலும் அதிகாரிகளால் சரிபார்ப்புக்கு அடிக்கடி கேட்கப்படுகிறது. ஆனால், இ-சேவை மையம் மூலமாக அடங்கல் வழங்கப்படுவதில்லை. இதனை விண்ணப்பித்து 15 முதல் 30 நாட்களுக்குள் அடங்கல் வழங்கப்படுகிறது. இவற்றை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ பெற்று சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தமிழக அரசு இந்த சேவையையும் இ-சேவை மையம் மூலமாக, எளிதாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பணிக்காக, தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அடங்கல் வழங்குவது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்த போது, விவசாயிகளின் விளை நிலங்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாகச் சென்று அடங்கல் விவரத்தை பதிவு செய்யலாம். விவசாயிகளும் தங்கள் சாகுபடி விவரங்களை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம்  இரு பதிவுகளையும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வேளாண் அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இதன் பின்னர்,  விவசாயிகள் இ- சேவை மையங்களில் அடங்கலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிர் சாகுபடி அடிக்கடி மாறும் என்பதால் ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதிக்குள் ‘அடங்கல்’ விவரத்தை ஆன்லைன் மூலமாக பதிவு செய்துவிட வேண்டும். பயிர்க் காப்பீடு, வங்கிக் கடன், விவசாய நகைக் கடன், மானியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே அடங்கல் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு உதவும் இந்தத் திட்டம் விரைவில் அறிமுகப்ப டுத்தப்படவுள்ளது என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories