இனி இ-சேவை மையத்தில் பெறலாம் இ-அடங்கல்! சிட்டா, பட்டா போல் எளிதாகிறது!

esevai tamilnadu e1536025650465 - 2026

சென்னை: இனி ஆன்லைனிலேயே இ அடங்கல் பெறலாம். ஆன்லைனில் சிட்டா மற்றும் பட்டா பெறுவது எளிமையாக்கப்பட்டது போல, அடங்கல் பெறுவதற்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.

விவசாயிகள் அரசு மானியம், பயிர்க்கடன், மானிய விலை யில் உரம் பெறுதல், பயிர்க் காப்பீடு பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கும், நிலஅளவையின் போதும் தங்களின் விளை நிலத்துக்கான பட்டா, சிட்டா ஆகியவற்றை அளிப்பது கட்டாயத் தேவையாக உள்ளது. இவை தற்போது இ-சேவை மையம் மூலமாகவே எளிதில் வழங்கப்படுகிறது.

தற்போது அடங்கலும் அதிகாரிகளால் சரிபார்ப்புக்கு அடிக்கடி கேட்கப்படுகிறது. ஆனால், இ-சேவை மையம் மூலமாக அடங்கல் வழங்கப்படுவதில்லை. இதனை விண்ணப்பித்து 15 முதல் 30 நாட்களுக்குள் அடங்கல் வழங்கப்படுகிறது. இவற்றை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ பெற்று சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தமிழக அரசு இந்த சேவையையும் இ-சேவை மையம் மூலமாக, எளிதாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பணிக்காக, தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அடங்கல் வழங்குவது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்த போது, விவசாயிகளின் விளை நிலங்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாகச் சென்று அடங்கல் விவரத்தை பதிவு செய்யலாம். விவசாயிகளும் தங்கள் சாகுபடி விவரங்களை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம்  இரு பதிவுகளையும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வேளாண் அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பர்.

இதன் பின்னர்,  விவசாயிகள் இ- சேவை மையங்களில் அடங்கலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிர் சாகுபடி அடிக்கடி மாறும் என்பதால் ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதிக்குள் ‘அடங்கல்’ விவரத்தை ஆன்லைன் மூலமாக பதிவு செய்துவிட வேண்டும். பயிர்க் காப்பீடு, வங்கிக் கடன், விவசாய நகைக் கடன், மானியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே அடங்கல் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு உதவும் இந்தத் திட்டம் விரைவில் அறிமுகப்ப டுத்தப்படவுள்ளது என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories