தமிழகத்திற்க்கு வெள்ள நிவாரண உதவி செய்ய மத்திய அரசிடம் முதலமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் வலியுறுத்தல்

 

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, தாமதமின்றி உதவித் தொகையை பரிந்துரைக்க மத்தியக் குழுவை விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர் . ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர். ராஜ்நாத் சிங்கை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழக வெள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார். முன் எப்போதும் இல்லாத அளவில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நேரிட்டுள்ள சேதங்கள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கிக் கூறினார். தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமது தலைமையின் கீழ் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவினர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துக்கூறினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளுடன், தமிழக அரசின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் வழங்கிய உதவிக்காக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தமிழகம் முழுவதிலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், வரும் 23-ம் தேதி திங்கட்கிழமைக்குள் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மத்திய அரசிடமிருந்து பிற நிதியுதவியை கோரியும் விரிவான கோரிக்கை மனு மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

மழை வெள்ளச் சேத விவரங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவும், தாமதமின்றி மத்திய உதவியைப் பெற பரிந்துரை செய்யவும், மத்தியக் குழு ஒன்றை விரைவாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சரை கேட்டுக்கொண்டார். தமிழக அரசிடமிருந்து விரிவான அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக மத்தியக் குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உறுதி அளித்தாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories