நான் தீவிரவாதி இல்லை; என்னை கட்டித் தழுவுவீர்களா?: இஸ்லாமிய இளைஞர் உருக்கம்

Published:

images paris - 2026பாரீஸ்:

நான் தீவிரவாதி இல்லை… என்னை கட்டித் தழுவுவீர்களா? என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்த இஸ்லாமிய இளைஞரைப் பார்த்து, பாரீஸ் மக்கள் சிலர் கண்ணீருடன் கட்டித் தழுவினர்.

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு இஸ்லாமிய இளைஞர் தன் கண்களை கட்டியப்படி, ‘நான் தீவிரவாதி இல்லை, என்னை கட்டி அணைப்பீர்களா?’ என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார்.

இதைக் கண்ட பாரீஸ் மக்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த இஸ்லாமிய இளைஞரை கட்டியணைத்தனர். இதில் பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியபடியே அந்த இளைஞரை கட்டியணைத்தனர்.

அதன்பின், அங்கே கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர், ”நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான் யாரையும் கொன்றது இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களை கொன்றால் அவன் தீவிரவாதிதான். அதில் மாற்றமில்லை. ஆனால் ஒரு இஸ்லாமியர் அதைச் செய்யமாட்டார்” என்று கூறினார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img