கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப் படுத்தினராம். இதனால் மீனவர்கள் பெரும் நஷ்டத்தோடு கரை திரும்பியுள்ளனர். இனி கடலில் கால் வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்று மீனவர்கள் குற்றம் சாட்டினர்.




