தமிழக போலீஸை கடனாளியாக்கிய காவல் துறை !

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டிகொண்டு பொதுமக்கள் எந்த உதவியாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியிடுவதை அணைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் காவல் துறையில் சென்னையில் பணியாற்றும் காவலர் மதன்குமார் என்பவர் அவரது மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அந்த காவலர் அவரது மனைவியை காப்பாற்ற அவசர மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு உடனடியாக வழங்க வேண்டிய நல வாரிய நிதியை கேட்டு விண்ணப்பித்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் காவல் துறையில் பணியாற்றும் உயர்அதிகாரிகளின் மெத்தன செயல்ப்பட்டால் காவலருக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காததால் அவர் கடன் வாங்கி அவரது மனைவியை காப்பாற்றியதாக ஒரு தகவல் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தியில் தெரிவித்துள்ளதாவது :-

மனிததன்மை இன்றி பணியாற்றி தமிழக காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள்

காக்கும் காவல்துறைக்கே கலக்கமா?.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

ஊரிலுள்ளோருக்கு பிரச்னை என்றால் காவல்துறைக்கு போவோம்… அந்த காவல்துறையினருக்கே ஒரு பிரச்னை என்றால் யாரிடம் போவது?.

சென்னை மாநகர காவல் கட்டுபாட்டில் உள்ள திருமங்கலம் வி5 காவல் நிலையத்தில் காவலராகப் மதன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறாராம்.

கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது மனைவியை சிறுநீரக செயல் இழந்து கோமா நிலையில் வானகரத்தில் உள்ளஅப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 8.11.2015 அன்று அட்மிட் செய்துள்ளாராம்.

இந்த நிலையில் 20.11.2015 அன்று பத்து இலட்சம் கட்ட வேண்டும் என்று பில்வந்ததும் கலங்கிப் போனவர் காவலர்துறையில் இயங்கும் நல வாரியத்தையும், மருத்துவக் காப்பீடு நிறுவனத்தையும் அணுகியுள்ளார்.

நல வாரிய பெண் அதிகாரி அனைத்து பேப்பர்ளையும் வாங்கி வைத்துக்கொண்டு காப்பீட்டு நிறுவனத்தில் தடையின்மைச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

அவர்களோ டிஸ்சார்ஜ் ஆகாமல் சான்றிதழ் தர மறுத்து விட்டபடியால், மீண்டும் நல வாரிய அலுவலரிடம் வந்தாராம். அவர் ஏடிஜிபியிடம் அழைத்து சென்றுள்ளார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் உடனே மேலொப்பமிட்டு, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி ஆவன செய்யுமாறு கூறியுள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆனால், மீண்டும் 27.11.2015 அன்று அழைத்த அந்த பெண் அதிகாரி, தனது உதவியாளரிடம் பேசுமாறு கூறியுள்ளார். அவரோ, திங்கட்கிழமை 30.11.2015 அன்றுதான் கடிதத்தை தட்டச்சு செய்ய முடியும்.

அதற்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டாராம். செய்வதறியாமல் தவித்த இவர் காப்பீடு நிறுவனத்திலிருந்து கிடைத்த ரூ. லட்சம் போக மீதமுள்ள தொகைக்காக உறவினர்கள், நண்பர்ள் அனைவரிடமும் மன்றாடி பணத்தைப் புரட்டி 28.11.2015 அன்று மருத்துவமனையில் கட்டி, மனைவியை டிஸ்சார்ஜ் செய்து விட்டு இப்போது தவிக்கிறாராம்.

இதைத்தான் “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கவில்லை” எனச் சொல்வார்களோ?

என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டி கொண்டுள்ளவர்கள் காவல் துறையில் பணியாற்றும் காவலர் குடும்பத்தின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட உடனடியாக உதவாததை என்னவெண்பது .?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories