தமிழக போலீஸை கடனாளியாக்கிய காவல் துறை !

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டிகொண்டு பொதுமக்கள் எந்த உதவியாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியிடுவதை அணைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் காவல் துறையில் சென்னையில் பணியாற்றும் காவலர் மதன்குமார் என்பவர் அவரது மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அந்த காவலர் அவரது மனைவியை காப்பாற்ற அவசர மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு உடனடியாக வழங்க வேண்டிய நல வாரிய நிதியை கேட்டு விண்ணப்பித்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் காவல் துறையில் பணியாற்றும் உயர்அதிகாரிகளின் மெத்தன செயல்ப்பட்டால் காவலருக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காததால் அவர் கடன் வாங்கி அவரது மனைவியை காப்பாற்றியதாக ஒரு தகவல் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தியில் தெரிவித்துள்ளதாவது :-

மனிததன்மை இன்றி பணியாற்றி தமிழக காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள்

காக்கும் காவல்துறைக்கே கலக்கமா?.

ஊரிலுள்ளோருக்கு பிரச்னை என்றால் காவல்துறைக்கு போவோம்… அந்த காவல்துறையினருக்கே ஒரு பிரச்னை என்றால் யாரிடம் போவது?.

சென்னை மாநகர காவல் கட்டுபாட்டில் உள்ள திருமங்கலம் வி5 காவல் நிலையத்தில் காவலராகப் மதன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறாராம்.

கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது மனைவியை சிறுநீரக செயல் இழந்து கோமா நிலையில் வானகரத்தில் உள்ளஅப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 8.11.2015 அன்று அட்மிட் செய்துள்ளாராம்.

இந்த நிலையில் 20.11.2015 அன்று பத்து இலட்சம் கட்ட வேண்டும் என்று பில்வந்ததும் கலங்கிப் போனவர் காவலர்துறையில் இயங்கும் நல வாரியத்தையும், மருத்துவக் காப்பீடு நிறுவனத்தையும் அணுகியுள்ளார்.

நல வாரிய பெண் அதிகாரி அனைத்து பேப்பர்ளையும் வாங்கி வைத்துக்கொண்டு காப்பீட்டு நிறுவனத்தில் தடையின்மைச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

அவர்களோ டிஸ்சார்ஜ் ஆகாமல் சான்றிதழ் தர மறுத்து விட்டபடியால், மீண்டும் நல வாரிய அலுவலரிடம் வந்தாராம். அவர் ஏடிஜிபியிடம் அழைத்து சென்றுள்ளார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் உடனே மேலொப்பமிட்டு, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி ஆவன செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால், மீண்டும் 27.11.2015 அன்று அழைத்த அந்த பெண் அதிகாரி, தனது உதவியாளரிடம் பேசுமாறு கூறியுள்ளார். அவரோ, திங்கட்கிழமை 30.11.2015 அன்றுதான் கடிதத்தை தட்டச்சு செய்ய முடியும்.

அதற்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டாராம். செய்வதறியாமல் தவித்த இவர் காப்பீடு நிறுவனத்திலிருந்து கிடைத்த ரூ. லட்சம் போக மீதமுள்ள தொகைக்காக உறவினர்கள், நண்பர்ள் அனைவரிடமும் மன்றாடி பணத்தைப் புரட்டி 28.11.2015 அன்று மருத்துவமனையில் கட்டி, மனைவியை டிஸ்சார்ஜ் செய்து விட்டு இப்போது தவிக்கிறாராம்.

இதைத்தான் “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கவில்லை” எனச் சொல்வார்களோ?

என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டி கொண்டுள்ளவர்கள் காவல் துறையில் பணியாற்றும் காவலர் குடும்பத்தின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட உடனடியாக உதவாததை என்னவெண்பது .?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

Topics

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories