ஏன் இத்தனை அவதூறு வழக்குகள்? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

 

தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் தொடர்ந்து குவிவதால் ஏன் இத்தனை அவதூறு வழக்குகள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று30-11-2015 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆட்சி நிர்வாகம் பற்றிய விமர்சனங்களை தனிநபர் மீதான அவதூறாக எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

கடந்த அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவர் பேசியபோது அவதூறு செய்ததாக விஜயகாந்த் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

இதனை எதிர்த்து விஜயகாந்த் சார்பாக செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி மிஸ்ரா கூறியதாவது :-

அவதூறு வழக்குகள் தமிழக மாநிலத்திலிருந்து அதிகம் வருகின்றன… ஏன்?

இந்தக் கருத்துகள் ஆட்சி நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான விமர்சனங்கள். இதில் தனிநபருக்கு எதிராக எதுவும் இல்லை. பிறகு ஏன் இந்த குற்ற அவதூறு வழக்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அல்ல என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் அதே நீதிபதிகள் அமர்வுதான் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்த மனுக்களை விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தது. சுப்பிரமணியன் சுவாமி மீதும் தமிழக அரசு பல அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளது .

இதே நீதிபதிகள் அமர்வு அவதூறு வழக்குகளை தண்டனைக்குரிய குற்றம் என்பதிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த மனுக்கள் மீது விரிவான விசாரணைகள் மேற்கொண்டது.

நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இது குறித்து வாதிடுகையில், அவதூறு வழக்கு தண்டனைக்குரிய குற்றம் என்பது காலனியாதிக்க கால சட்டம் என்றும், ஆனால் தற்போது சுதந்திரத்துக்கு பிறகான காலக்கட்டத்தில் இந்த சட்டம் கருத்துரிமை, பேச்சுரிமையை முடக்குவதோடு நல்லாட்சிக்கு அத்தியாவசியமான உண்மை மற்றும் பொது விவாதம் ஆகியவற்றையும் முடங்கச் செய்கிறது என்று கூறினர்.

மேலும், அரசியல் சாசன சட்டம் பிரிவு 19(1)-ன் கீழ் உள்ள பேச்சுரிமைக்கு அவதூறு வழக்குகள் இடையூறு விளைவித்து வருகிறது என்று அரசியல் தலைவர்கள் பலரும் கூறியதும் இந்த விசாரணைகளின் போது நிகழ்ந்தது.

பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் அவதூறு வழக்குகளை கடுமையாக கேள்விக்குட்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் மனு மீதான விசாரணையில் ‘ஏன் தமிழகத்திலிருந்து இவ்வளவு அவதூறு வழக்குகள்?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணைக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, உச்ச நீதிமன்ற விசாரணையின்போது விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் மக்களின் வரிப்பணத்தை இது போன்ற வழக்குகளில் தமிழக அரசு வீணடிக்கிறது, அத்துடன், எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கும் நோக்கத்திலேயே, தமிழக அரசு இதுபோன்ற அவதூறு வழக்குகளை அதிக எண்ணிக்கையில் தொடுக்கிறது என்று குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories