தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? : கமல்ஹாசன்

 
தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? என்றும் வெள்ள சேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
 
மேலும் நடிகர் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :-
 
மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும் வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் கற்பனை செய்து பாருங்கள்?.
 
மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை. என்னுடைய வரியை ஒழுங்காக செலுத்தி வருகிறேன். கடுமையாக நான் உழைத்து சம்பாதித்த அந்த பணத்தை வைத்து எனக்கும் என் மக்களுக்கும் நிர்வாகம் என்ன செய்து இருக்கிறது? எனக்கு கடவுள் கிடையாது. கடவுளாக பாவித்துக்கொள்பவர்களின் முடிவுகளையும் ஏற்க மாட்டேன்.
 
ஆளும் அரசாங்கமானது, அது எந்த கட்சியாக இருந்தாலும் கார்ப்பரேட் திட்டத்துக்கு ரூ.4,000 கோடி வரை செலவிட முடிகிறது. நாட்டில் நாம் 120 கோடி மக்கள் இருக்கிறோம். இந்த மக்களுக்கு ரூ.4,000 கோடியை ஏன் பிரித்துக் கொடுக்க கூடாது? அப்படி கொடுத்து இருந்தால் இந்தியர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பார்கள்.
 
ஏழைகளும் நடுத்தர மக்களும் வெள்ள பாதிப்பினால் அச்சத்தில் இருக்கிறார்கள். இதற்காக வசதி படைத்தவர்கள் வெட்கப்பட வேண்டும். நான் பெரிய பணக்காரன் இல்லை. ஆனாலும் என் ஜன்னலை திறந்து வெளியே மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து வெட்கப்படுகிறேன். எனக்கு கடவுள் கிடையாது நிர்வாகம் சீர்குலைந்து இருக்கிறது. மழை நின்ற பிறகும் கூட பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு சென்னை திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகும்.
 
மக்கள் படும் துன்பங்கள் என்னை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. நான் வசதியான வீட்டில் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது எனது வருமானம் மிகவும் சொற்பமானது. ஆனால் வெள்ள நிவாரணத்துக்கு அரசு நம்மிடம் பணம் கேட்கிறது. ஆனாலும் நான் பணம் கொடுப்பேன். ஏனென்றால் அரசு நிர்வாகத்தை நான் மதிக்கிறேன். வசதி படைத்தவனாக என்னை நினைத்துக்கொண்டு கொடுக்கப்போவது இல்லை. நான் எனது தமிழக மக்களை உண்மையாகவே நேசிக்கிறேன் என கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

Entertainment News

Popular Categories