அரசு வேண்டுகோள் விடுக்கவில்லை : அமெரிக்கா தமிழக வெள்ள சேத பணிகளுக்கு உதவ தயார்

 
 
தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்கா தமிழக வெள்ள சேத பணிகளுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளது. 
 
இதுகுறித்து வாஷிங்டன் நகரில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:-
 
பல ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை தமிழ்நாட்டில் பெய்து உள்ளது. இதன்காரணமாக மிக மோசமாக சென்னை நகரை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.இந்த வெள்ளத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். எங்களுடைய சிந்தனையெல்லாம், இன்னும் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களைப் பற்றியே உள்ளது.
 
எனவே வெள்ளசேத பணிகளுக்கு தமிழக மக்களுக்கு உதவிசெய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் உதவிட இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு வெள்ள நிலைமை குறித்து அமெரிக்கா விவாதித்தது.எனினும், இதுவரை இந்திய அரசிடம் இருந்து எங்களிடம் உதவிகோரி எந்த வேண்டுகோளும் வரவில்லை. நிச்சயமாக, தனது உள்நாட்டு தேவைகளையும் அல்லது அவசர உதவிகளையும் தன்னால் சுயமாக நிவர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு இந்திய அரசாங்கம் வளர்ச்சி கொண்டதாக உள்ளதையும் குறிப்பிடவேண்டும்.
 
பொதுவாக இதுபோன்ற இயற்கை பேரழிவுகளின்போது, இந்தியா போன்ற கூட்டாளி நாடுகளுக்கு எங்களால் எந்த விதத்தில் உதவி அளிக்க முடியுமோ அதை நாங்கள் செய்வது வழக்கம்.சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், கடந்த 3-ந்தேதி எங்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியது. அதன்படி தமிழ்நாட்டில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என மார்க் டோனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories