செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது; நீர் திறப்பும் குறைப்பு: அதிகாரிகள்

சென்னை:

சென்னை ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது; செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 10-ந்தேதி பூண்டி ஏரியில் 160 மில்லியன் கன அடி நீர் இருந்தது. நேற்று, அது 2,609 மில்லியன் கன அடியாக இருந்தது.
சோழவரம் ஏரியில் 86 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு நேற்று 809 மில்லியன் கன அடியாக அதிகரித்திருந்தது.

செங்குன்றம் ஏரியில் 408 மில்லியன் கன அடியில் இருந்து நேற்று 2,745 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 791 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு நேற்று 3,108 மில்லியன் கன அடியாக அதிகரித்தது. இதனால் உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4-ந்தேதி பூண்டி ஏரியில் 12 ஆயிரத்து 215 கன அடி வெளியேற்றப்பட்ட நீர், நேற்று 10 ஆயிரத்து 391 கன அடியாகக் குறைக்கப்பட்டது. சோழவரத்தில் 175 கன அடியில் இருந்து, நேற்று 100 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

செம்பரம்பாக்கத்தில் கடந்த 4-ந்தேதி 5 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில், நேற்று 3 ஆயிரத்து 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. செங்குன்றம் ஏரியில் மட்டும் கடந்த 4-ந்தேதி 1,894 கன அடியாக இருந்தது, நேற்று சற்று கூடுதலாக 1,967 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த ஏரிகளின் நீர்திறப்பு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் உயரம் 24 அடியாகும். அதில் தற்போது 21.95 அடி உயரம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் வரவு 3 ஆயிரத்து 493 கனஅடியாகும். நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரத்து 500 கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories