செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது; நீர் திறப்பும் குறைப்பு: அதிகாரிகள்

சென்னை:

சென்னை ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது; செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 10-ந்தேதி பூண்டி ஏரியில் 160 மில்லியன் கன அடி நீர் இருந்தது. நேற்று, அது 2,609 மில்லியன் கன அடியாக இருந்தது.
சோழவரம் ஏரியில் 86 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு நேற்று 809 மில்லியன் கன அடியாக அதிகரித்திருந்தது.

செங்குன்றம் ஏரியில் 408 மில்லியன் கன அடியில் இருந்து நேற்று 2,745 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 791 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு நேற்று 3,108 மில்லியன் கன அடியாக அதிகரித்தது. இதனால் உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

கடந்த 4-ந்தேதி பூண்டி ஏரியில் 12 ஆயிரத்து 215 கன அடி வெளியேற்றப்பட்ட நீர், நேற்று 10 ஆயிரத்து 391 கன அடியாகக் குறைக்கப்பட்டது. சோழவரத்தில் 175 கன அடியில் இருந்து, நேற்று 100 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

செம்பரம்பாக்கத்தில் கடந்த 4-ந்தேதி 5 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில், நேற்று 3 ஆயிரத்து 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. செங்குன்றம் ஏரியில் மட்டும் கடந்த 4-ந்தேதி 1,894 கன அடியாக இருந்தது, நேற்று சற்று கூடுதலாக 1,967 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த ஏரிகளின் நீர்திறப்பு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் உயரம் 24 அடியாகும். அதில் தற்போது 21.95 அடி உயரம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் வரவு 3 ஆயிரத்து 493 கனஅடியாகும். நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரத்து 500 கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories